Naan Payapadum நான் பயப்படும் J03
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
1.உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
2.நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
Note: These lyrics are shared for educational and devotional purposes only. All copyrights belong to their respective owners/original creators.