Yaar Ennai யார் என்னைக் J44
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்
தந்தை S.J. பெர்க்மான்ஸ் அவர்கள்
இந்த வசனங்களை கொண்டு பாடியுள்ளார்
சங்கீதம் 27:10
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
சங்கீதம் 51:9
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
சங்கீதம் 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
சங்கீதம் 51:11
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
சங்கீதம் 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
தீத்து 3:7
அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு (ம) ஊழியப் பாதை குறித்த தகவல்கள்.
பிறப்பு: 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தந்தை Sj.Berchmans பிறந்தார்
பிறப்பிடம்: தந்தை Sj.Berchmans அவர்கள் சிவகங்கை மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள சூசைப்பார் பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
பெற்றோர்: அவருடைய பெற்றோர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சூசை மற்றும் பெரியநாயகம் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.
கல்வி: மதுரையிலுள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
பாடல்கள்: தந்தை அவர்கள் அநேக பாடல்கள் பாடியுள்ளார் 480-க்கும் மேற்பட்ட ஆவிக்குரிய பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
குருத்துவம்: சிறுவயதிலேயே கத்தோலிக்க குருவாக விரும்பிய இவர், திருச்சியில் உள்ள செயின்ட் பால் செமினாரியில் (St. Paul Seminary) பயின்று, 1974-ல் கத்தோலிக்க பாதிரியாராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
இசை ஆர்வம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றியபோது கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார். இதுவே அவர் பிற்காலத்தில் பாடல்களை இயற்றவும், இசையமைக்கவும் அடித்தளமாக அமைந்தது.
ஊழியம்: ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது எளிய ஆடைகளையே விரும்பி அணிந்து, தனது ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து வருகிறார். 1970-களின் இறுதியில் உடல்நலக் குறைவாலும், தனிமையாலும் பாதிக்கப்பட்டிருந்தபோது, இறைவனின் அழைப்பைத் தன் இதயத்தில் உணர்ந்துள்ளார்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம்: 1983-ல் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்றார்.
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்:
"ஜெபத்தோட்டம்" (Jebathottam Ministries) என்ற அமைப்பை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நிறுவினார்.
இவர் இயற்றிய "விசுவாச கீதங்கள்" மற்றும் "ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்" பாடல் தொகுப்புகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது இந்த பாடல் வரிகளை நம்முடைய தளத்தில் தந்தை அவர்கள் பாடிய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை S.J. பெர்க்மான்ஸ் (Fr. S.J. Berchmans) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஊழியப் பாதை குறித்த தகவல்கள் இதுவே
Note: These lyrics are shared for educational and devotional purposes only. All copyrights belong to their respective owners/original creators.
